பாகிஸ்தான் சூப்பர் லீக் 2025 தொடர் காலவரையின்றி நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கான முக்கிய காரணம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அனுமதி மறுத்ததுதான். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், மீதமுள்ள போட்டிகளை UAE-யில் நடத்தும் என அறிவித்திருந்தது. ஆனால், எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம் போட்டிகளை நடத்த முடியாது என மறுத்துவிட்டது.இந்த முடிவின் பின், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அறிவிப்பு அந்நிய தேசத்தில் பெருமை பறிபோன நிலையில் மாறிவிட்டது.

தற்போது வெளிநாட்டு வீரர்கள் தங்களது நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட உள்ளனர். இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர்ச் சூழலில், எமிரேட்ஸ் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கவேண்டாம் என்ற எண்ணத்தில் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.பாகிஸ்தானின் பிசிசிக்கு எதிரான நடவடிக்கையாக இதைப் பார்க்கலாம். ஏற்கெனவே தங்கள் நாட்டில் போட்டிகள் நடத்த இயலாத நிலையில், பெருமைக்காக வெளியிட்ட அறிவிப்பே இப்போதைய அவமானத்திற்கு காரணமாகியுள்ளது
.பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு இது கடும் பின்னடைவாக உள்ளது.மறுபுறம், ஐபிஎல் தொடரை நடத்துவதற்காக பிசிசியை பல நாடுகள் தொடர்புகொண்டுள்ளன. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் தங்கள் நாட்டில் மீதமுள்ள போட்டிகளை நடத்த அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் பாகிஸ்தானின் கிரிக்கெட் நிர்வாகத்தின் திட்டமில்லாத செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது. அவர்கள் திட்டமிடாமல் வெளியிட்ட அறிவிப்பு, தற்போது அவர்களை சர்வதேச அளவில் நாசமாக்கியுள்ளது.இதன் பின் விளைவுகள், பாகிஸ்தான் கிரிக்கெட் மற்றும் அரசியல் தலைமைகளுக்கு கடும் சவாலாக இருக்கலாம்.