புதுடெல்லி: ராஜஸ்தானில் உள்ள கோட்டாமக்களவை தொகுதியில் பா.ஜ.க. எம்.பி.யாக 3-வது முறையாக ஓம்பிர்லா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கடந்த லோக்சபாவில் 5 ஆண்டுகள் சபாநாயகராக பதவி வகித்தார். இந்நிலையில், குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
அவரை சபாநாயகர் இருக்கைக்கு பிரதமர் மோடியும், எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியும் அழைத்து வந்தனர். அப்போது மக்களவை வழக்கப்படி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முதலில் பேசினார். அப்போது ராகுல் காந்தி கூறியதாவது:-
சபையில் பேசுவதற்கு எங்களை (எதிர்க்கட்சி எம்.பி.க்கள்) நீங்கள் (சபாநாயகர்) அனுமதிப்பீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன். அதே சமயம், எந்த அளவுக்கு திறமையாக செயல்படப் போகிறார்கள் என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.
இந்தியாவின் குரல் இங்கு எந்த அளவுக்கு ஒலிக்கிறது என்பதுதான் முக்கியம். எனவே, எதிர்க்கட்சிகளின் குரலை முடக்குவது ஜனநாயகத்துக்கு சரியல்ல. எதிர்க்கட்சிகள் அரசியல் சாசனத்தை பாதுகாக்க வேண்டும் என்பதை சமீபத்திய லோக்சபா தேர்தல் நமக்கு உணர்த்தியுள்ளது. இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
அவருக்கு பின், லோக்சபாவில், 3-வது பெரிய கட்சியாக உள்ள, சமாஜ்வாதி தலைவரும், எம்.பி.,யுமான அகிலேஷ் யாதவ், ”எதிர்க்கட்சி எம்.பி.,க்களின் குரல் நசுக்கப்படாது என, எதிர்பார்க்கிறோம்.
மேலும், எதிர்க்கட்சிகள் சஸ்பெண்ட் போன்ற நடவடிக்கை இருக்காது என, நம்புகிறேன். லோக்சபா எம்.பி.க்கள், நீங்கள் (சபாநாயகர்) அனைத்து எம்.பி.க்களுக்கும் சமமான மரியாதை கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.
இதேபோல் திரிணாமுல் எம்.பி. சுதீப் பண்டோபாத்யாய், தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலர் சபையை பாரபட்சமின்றி நடத்துமாறு சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
மக்களவையின் 2-வது சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட ஓம் பிர்லாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி கூறியதாவது:-
ராஜஸ்தானின் கோட்டா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி. சபாநாயகராக ஓம் பிர்லா நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார். இந்த லோக்சபா சார்பில் உங்களை வாழ்த்துகிறேன்.
அவர்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு உங்கள் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுவார்கள். உங்கள் இனிமையான புன்னகை அவர்கள் அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கிறது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.