பெங்களூரு: டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளது, இது தொடர்பாக கர்நாடக அரசு அந்த நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனங்களில் ஒன்றான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், 2026 நிதியாண்டில் தனது பணியாளர்களை 2 சதவீதம் குறைக்க முடிவு செய்துள்ளது. இதன் விளைவாக 12,200 ஊழியர்கள் வேலை இழப்பார்கள் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

கர்நாடக தொழிலாளர் அமைச்சர் சந்தோஷ் லாட் கூறுகையில், “டிசிஎஸ் நிறுவனத்தின் திடீர் முடிவு அதிர்ச்சியளிக்கிறது. 12,000 ஊழியர்கள் என்பது மிகப் பெரிய எண்ணிக்கை. இதைத் தடுக்க அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம்.
தொழிலாளர் துறை அதிகாரிகள் டிசிஎஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். கூடுதலாக, நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். தொழிலாளர் “சட்டத்தின்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் கூறினார்.