By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    மாலியில் கடத்தப்பட்ட இந்தியர்: ஒடிசாவைச் சேர்ந்த வெங்கட்ராமன் என உறுதி
    1 Min Read
    பிறப்பு விகிதம் குறைவுக்கு தீர்வாக ரஷ்யா மாணவிகளுக்கு பெற்றோராக ஊக்குவிப்பு திட்டம்
    1 Min Read
    அரசியல் மாற்றத்தை நோக்கி எலான் மஸ்க் எடுத்த அதிரடி முடிவு
    1 Min Read
    கூடுதல் வரிகள்… அமெரிக்க பொருட்களுக்கு பதிலடி வரிகளை விதிக்க மத்திய அரசு திட்டம்..!!
    3 Min Read
    பிரேசில் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு: 17வது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    தலாய் லாமாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து: உலகமெங்கும் இருந்து பாராட்டுகள்
    1 Min Read
    கனமழை.. காவிரியில் தமிழகத்திற்கு 47,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டது
    1 Min Read
    வாகனக் கட்டுப்பாடுகள்: டெல்லியில் குறைந்த விலையில் விற்பனையாகும் பழைய சொகுசு கார்கள்
    2 Min Read
    30 புனித தலங்களை இணைக்கும் 17 நாள் சுற்றுலா: ஏசி சுற்றுலா ரயில் ஏற்பாடு..!!
    4 Min Read
    மஹாராஷ்டிராவில் சாலை ஒப்பந்ததாரர்களின் போராட்டம் தீவிரம்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    ரயில்கள் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பு முன்பதிவு பட்டியல் வெளியிடப்படும்..!!
    1 Min Read
    நாளை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்..!!
    2 Min Read
    முழு கொள்ளளவான 120 அடியை எட்டி கடல் போல் காட்சியளிக்கும் மேட்டூர் அணை..!!
    1 Min Read
    காவல் துறை சட்டத்தை கையில் எடுத்து செயல்படுகிறது: ஓ.பி.எஸ் குற்றச்சாட்டு
    1 Min Read
    திமுக ஆட்சி அராஜகம் மற்றும் ரவுடித்தனம்: பிரேமலதா விமர்சனம்..!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: சபரிமலையில் பிரசித்தி பெற்ற எருமேலி பேட்டை துள்ளல்!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > இந்தியா > சபரிமலையில் பிரசித்தி பெற்ற எருமேலி பேட்டை துள்ளல்!
இந்தியா

சபரிமலையில் பிரசித்தி பெற்ற எருமேலி பேட்டை துள்ளல்!

Periyasamy
Last updated: January 8, 2025 2:26 pm
By Periyasamy 2 Min Read
Share
SHARE

திருவனந்தபுரம்: மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு நடைபெறும் பிரசித்தி பெற்ற எருமேலி பேட்டை துள்ளல் வரும் 11-ம் தேதி நடக்கிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் தற்போது மகரவிளக்கு பூஜை நடைபெற்று வருகிறது. மகரவிளக்கு பூஜைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது. இதனால் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நேற்று முன்தினம் 92,715 பேர் தரிசனம் செய்தனர். இந்த மகரவிளக்கு காலத்தில் நேற்று இரவு வரை 9 நாட்களில் 7.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். ஆன்லைன் முன்பதிவு வரும் 16-ம் தேதி வரை முடிவடைந்ததால், பெரும்பாலான பக்தர்கள் உடனடி முன்பதிவு மூலம் தரிசனம் செய்து வருகின்றனர். இதனால், கடந்த சில நாட்களாக உடனடி முன்பதிவு வசதியை பயன்படுத்தி தினமும் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்து வருகின்றனர்.

பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் வரும் 14-ம் தேதி நடக்கிறது. மகரவிளக்கு பூஜையையொட்டி நடைபெறும் பிரசித்தி பெற்ற எருமேலி பேட்டை துள்ளல் வரும் 11ம் தேதி நடக்கிறது. எருமேலியில் பக்தர்கள் தங்கள் உடலுக்கு வண்ணமயமான சாயம் பூசி நடனமாடுவார்கள். பந்தளம் வலியகோயிக்கல் சாஸ்தா கோயிலில் இருந்து திருவாபரண ஊர்வலம் வரும் 12-ம் தேதி தொடங்குகிறது.

உடனடி முன்பதிவு எண்ணிக்கை 5 ஆயிரமாக குறைப்பு: மகரவிளக்கு பூஜையையொட்டி சபரிமலையில் கூட்ட நெரிசலை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இன்று (8-ம் தேதி) முதல் 15-ம் தேதி வரை உடனடி முன்பதிவு எண்ணிக்கை 10 ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைன் முன்பதிவுகளின் எண்ணிக்கை ஜனவரி 12-ம் தேதி 60,000 ஆகவும், ஜனவரி 13-ம் தேதி 50,000 ஆகவும், ஜனவரி 14-ம் தேதி 40,000 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் புல்மேடு காட்டுப்பாதை வழியாக சபரிமலைக்கு சென்ற சென்னையை சேர்ந்த லீலாவதி, அந்தோணி, பெரியசாமி, மதுரையை சேர்ந்த லிங்கம் ஆகியோருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு தொடர முடியாமல் தவித்தனர். இது குறித்து இரவு 8 மணியளவில் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த பாதையில் இரவு நேரங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் என்பதால், வனத்துறையினர் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்தனர்.

நீண்ட தேடுதல் மற்றும் மீட்புக்கு பின் இரவு 11 மணியளவில் மீட்கப்பட்டு சபரிமலை கோவிலுக்கு கொண்டு வரப்பட்டனர். வண்டிப்பெரியார் சத்திரம் பகுதியில் இருந்து புல்மேடு வனப் பாதை தொடங்குகிறது. அடர்ந்த வனப்பகுதி என்பதால் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எனவே சத்திரம் பகுதியில் இருந்து காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், அழுதக்கடவு மற்றும் முக்குழியில் இருந்து மாலை 4 மணி வரையிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த ஆண்டு புல்மேடு வனப்பாதை வழியாக செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் பக்தர்கள் வழி தவறி சிக்கி தவிக்கும் சம்பவங்கள் பலமுறை நடந்துள்ளன. எனவே பக்தர்களின் பாதுகாப்பு கருதி இன்று முதல் சத்திரம் பகுதியில் இருந்து காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

You Might Also Like

தலாய் லாமாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து: உலகமெங்கும் இருந்து பாராட்டுகள்

கனமழை.. காவிரியில் தமிழகத்திற்கு 47,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டது

வாகனக் கட்டுப்பாடுகள்: டெல்லியில் குறைந்த விலையில் விற்பனையாகும் பழைய சொகுசு கார்கள்

30 புனித தலங்களை இணைக்கும் 17 நாள் சுற்றுலா: ஏசி சுற்றுலா ரயில் ஏற்பாடு..!!

மஹாராஷ்டிராவில் சாலை ஒப்பந்ததாரர்களின் போராட்டம் தீவிரம்

TAGGED:DarshandevoteesSabarimalaசபரிமலைபக்தர்கள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
தமிழகம்

ரயில்கள் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பு முன்பதிவு பட்டியல் வெளியிடப்படும்..!!

By Periyasamy 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?