By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    சுற்றுலா பயணிகளை அதிக அளவு ஈர்க்கும் ஒளிரும் கடல்!
    1 Min Read
    இந்திய பயணத்தை ஆவலுடன் மார்கோ ரூபியா எதிர்நோக்கியுள்ளாராம்
    1 Min Read
    டிரோன் தாக்குதல் நடத்தியதாக ஈரான் மீது குவைத் குற்றச்சாட்டால் பரபரப்பு
    1 Min Read
    ஈரான் டிரோன்களை உக்ரைன் படைகள் வீழ்த்தின… அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்
    1 Min Read
    ஈரான் போர் குறித்து இன்று பாகிஸ்தானில் நடக்கிறது அமைதி பேச்சுவார்த்தை
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    பாடகி ஆஷா போஸ்லே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
    1 Min Read
    யமுனை நதியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 10 யாத்திரிகர்கள் பலி
    1 Min Read
    சிறப்பு தகுதிகளுடன் கூடிய 4 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு ஒப்புதல்
    2 Min Read
    3 மாநில தேர்தல்… விறுவிறுப்பாக நடந்து வரும் வாக்குப்பதிவு
    2 Min Read
    சிறுமியை கட்டி வைத்து தாக்கிய மாஜி ராணுவ வீரரால் பரபரப்பு
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    மேகதாது சீராய்வு மனு மீது விசாரணை வேண்டும் – தமிழ்நாடு அரசு முறையீடு…!
    1 Min Read
    ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்கும் நட்சத்திரப் பழம்!
    1 Min Read
    பேரழகை தரும் குங்குமப்பூ எண்ணெய்!
    1 Min Read
    அழகை மேம்படுத்தவும் உதவுகிறது கிரீன் டீ
    1 Min Read
    கரூரில் தபால் வாக்கு சேகரிப்பு பணி மும்முரம்
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: சபரிமலையில் பிரசித்தி பெற்ற எருமேலி பேட்டை துள்ளல்!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > இந்தியா > சபரிமலையில் பிரசித்தி பெற்ற எருமேலி பேட்டை துள்ளல்!
இந்தியா

சபரிமலையில் பிரசித்தி பெற்ற எருமேலி பேட்டை துள்ளல்!

admin
Last updated: January 8, 2025 2:26 pm
By admin 2 Min Read
Share
SHARE

திருவனந்தபுரம்: மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு நடைபெறும் பிரசித்தி பெற்ற எருமேலி பேட்டை துள்ளல் வரும் 11-ம் தேதி நடக்கிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் தற்போது மகரவிளக்கு பூஜை நடைபெற்று வருகிறது. மகரவிளக்கு பூஜைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது. இதனால் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நேற்று முன்தினம் 92,715 பேர் தரிசனம் செய்தனர். இந்த மகரவிளக்கு காலத்தில் நேற்று இரவு வரை 9 நாட்களில் 7.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். ஆன்லைன் முன்பதிவு வரும் 16-ம் தேதி வரை முடிவடைந்ததால், பெரும்பாலான பக்தர்கள் உடனடி முன்பதிவு மூலம் தரிசனம் செய்து வருகின்றனர். இதனால், கடந்த சில நாட்களாக உடனடி முன்பதிவு வசதியை பயன்படுத்தி தினமும் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்து வருகின்றனர்.

பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் வரும் 14-ம் தேதி நடக்கிறது. மகரவிளக்கு பூஜையையொட்டி நடைபெறும் பிரசித்தி பெற்ற எருமேலி பேட்டை துள்ளல் வரும் 11ம் தேதி நடக்கிறது. எருமேலியில் பக்தர்கள் தங்கள் உடலுக்கு வண்ணமயமான சாயம் பூசி நடனமாடுவார்கள். பந்தளம் வலியகோயிக்கல் சாஸ்தா கோயிலில் இருந்து திருவாபரண ஊர்வலம் வரும் 12-ம் தேதி தொடங்குகிறது.

உடனடி முன்பதிவு எண்ணிக்கை 5 ஆயிரமாக குறைப்பு: மகரவிளக்கு பூஜையையொட்டி சபரிமலையில் கூட்ட நெரிசலை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இன்று (8-ம் தேதி) முதல் 15-ம் தேதி வரை உடனடி முன்பதிவு எண்ணிக்கை 10 ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைன் முன்பதிவுகளின் எண்ணிக்கை ஜனவரி 12-ம் தேதி 60,000 ஆகவும், ஜனவரி 13-ம் தேதி 50,000 ஆகவும், ஜனவரி 14-ம் தேதி 40,000 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் புல்மேடு காட்டுப்பாதை வழியாக சபரிமலைக்கு சென்ற சென்னையை சேர்ந்த லீலாவதி, அந்தோணி, பெரியசாமி, மதுரையை சேர்ந்த லிங்கம் ஆகியோருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு தொடர முடியாமல் தவித்தனர். இது குறித்து இரவு 8 மணியளவில் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த பாதையில் இரவு நேரங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் என்பதால், வனத்துறையினர் உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து வந்தனர்.

நீண்ட தேடுதல் மற்றும் மீட்புக்கு பின் இரவு 11 மணியளவில் மீட்கப்பட்டு சபரிமலை கோவிலுக்கு கொண்டு வரப்பட்டனர். வண்டிப்பெரியார் சத்திரம் பகுதியில் இருந்து புல்மேடு வனப் பாதை தொடங்குகிறது. அடர்ந்த வனப்பகுதி என்பதால் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எனவே சத்திரம் பகுதியில் இருந்து காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், அழுதக்கடவு மற்றும் முக்குழியில் இருந்து மாலை 4 மணி வரையிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த ஆண்டு புல்மேடு வனப்பாதை வழியாக செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் பக்தர்கள் வழி தவறி சிக்கி தவிக்கும் சம்பவங்கள் பலமுறை நடந்துள்ளன. எனவே பக்தர்களின் பாதுகாப்பு கருதி இன்று முதல் சத்திரம் பகுதியில் இருந்து காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

You Might Also Like

தஞ்சை பெரிய கோயிலில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றம்

பாடகி ஆஷா போஸ்லே மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

யமுனை நதியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 10 யாத்திரிகர்கள் பலி

சிறப்பு தகுதிகளுடன் கூடிய 4 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு ஒப்புதல்

3 மாநில தேர்தல்… விறுவிறுப்பாக நடந்து வரும் வாக்குப்பதிவு

TAGGED:DarshandevoteesSabarimalaசபரிமலைபக்தர்கள்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
அரசியல் செய்திகள்

சுயேட்சை வேட்பாளர் முரளிதரனின் தீவிர வாக்கு சேகரிப்பு

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?