புதுடில்லி: விசா ரத்து நடவடிக்கையை அடுத்து இந்தியாவில் இருந்து 786 பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் கடும் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இதனைத்தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்தியா எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் பாகிஸ்தான் பரஸ்பர எதிர் நடவடிக்கை எடுத்து வருகிறது.
பாகிஸ்தானியர்களுக்கு வழங்கிய விசாவை உடனடியாக ரத்து செய்ய இந்தியா எடுத்த நடவடிக்கை முக்கியமானது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் அட்டாரி-வாகா எல்லை வழியாக வெளியேறுகின்றனர்.
இந்த நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த 786 பேர் இந்தியாவில் இருந்த வெளியேறியுள்ளனர். இவர்களில் பாகிஸ்தான் தூதரகத்தைச் சேர்ந்த 55 அதிகாரிகளும் அடங்குவார்கள். இந்தியாவுக்கு பதிலடியாக பாகிஸ்தானும் இந்தியர்களை வெளியேற்றி வருகிறது. அந்த வகையில் 1,465 இந்தியர்களை வெளியேற்றியுள்ளது. அவர்களில் 25 பேர் தூதரக அதிகாரிகள் ஆவார்கள். இதில் நீண்டகாலமாக இந்தியா விசா வைத்திருக்கும் 151 பாகிஸ்தானியர்களும் அடங்குவார்கள்.