நெல்லை: அ.தி.மு.க. வெற்றி உறுதி என்று கொட்டும் மழையில் எடப்பாடி பழனிசாமி பிரச்சார பயணத்தின் போது தெரிவித்தார்.
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி பிரச்சார பயணத்தை நடத்தி வருகிறார்.
நெல்லை வாகை அடி முனை பகுதியில் கொட்டும் மழையிலும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அவருடன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளார்.
அப்போது பேசிய இபிஎஸ்,” மழையிலும் இங்கு வந்துள்ள மக்களை பார்க்கும்போது அதிமுக வெற்றி உறுதியாகிவிட்டது” என்றார்.