புதுச்சேரி: நள்ளிரவு சாலைமறியல் செய்த மக்கள்… புதுச்சேரி முதலியார் பேட்டை ஜோதி நகரை சேர்ந்தவர் பா.ஜ.க. முன்னாள் எல்.எல்.ஏ. கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவியை பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் தாக்கினர்.
அதை கண்டித்து பா.ஜ.க. எம்.எல்.ஏ. அசோக்பாபு தலைமையில் அக்கட்சியினர் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று இரவு முதலியார் பேட்டை போலீஸ் நிலையம் முன்பு நேற்று நள்ளிரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். தாக்கியவர்களை கைது செய்யக்கோரி கோஷம் எழுப்பினர்.
போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தாக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுத்தனர். அதையடுத்து மறியல் செய்தவர்கள் கலைந்து சென்றனர்.
இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக தி.மு.க., எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் மீது வழக்குப் பதிய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.