By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    சாவர்க்கருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கலை… அமித்ஷா வேதனை
    1 Min Read
    அமெரிக்காவில் ட்ரம்ப் ‘கோல்டு கார்டு‘ விசா அறிமுகம்
    2 Min Read
    ட்ரம்ப்பை பின்பற்றிய மெக்சிகோ; இறக்குமதிகளுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு
    2 Min Read
    கம்போடியா மீது தாக்குதல் நடத்திய தாய்லாந்து : மீண்டும் உருவான போர் பதற்றம்
    1 Min Read
    ஐந்தாயிரம் பேருக்கு தற்கொலைப்படை தாக்குதல் பயிற்சி… மசூத் அசார் தகவல்
    2 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    திலீப் படத்தை திரையிடக்கூடாது… பஸ்சில் வாக்குவாதம் செய்த இளம் பெண்
    1 Min Read
    நாளை மறுநாள் விண்ணில் பறக்கிறது அமெரிக்க செயற்கைக்கோள்: இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்
    1 Min Read
    மேற்கு வங்கத்தில் 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
    1 Min Read
    இயற்கை எழில் நிறைந்த ஆறுகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
    2 Min Read
    இயற்கையின் ஸ்பரிசத்தை அனுபவிக்க வேண்டுமா? அப்போ இங்குதான் போகணும்
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    வரும் 19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு?
    1 Min Read
    பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றாவிடில் தொடர் வேலை நிறுத்தம்… ஜாக்டோ ஜியோ அறிவிப்பு
    2 Min Read
    முட்டையுடன் இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்!
    2 Min Read
    வழிபாட்டு முறைகளில் யாரும் தலையிடக்கூடாது… அறநிலையத்துறை தரப்பு வாதம்
    0 Min Read
    கோவையில் சிறப்பாக நடந்த கலைத் திருவிழா
    0 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ராகுல்காந்தி பேச்சுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > ராகுல்காந்தி பேச்சுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
அரசியல் செய்திகள்

ராகுல்காந்தி பேச்சுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்

Nagaraj
Last updated: August 5, 2025 10:15 am
By Nagaraj 2 Min Read
Share
SHARE

புதுடெல்லி: உண்மையான இந்தியர் இப்படி பேச மாட்டார் என்று ராகுல்காந்தி கருத்துக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல்காந்தி கடந்த 2022-ம் ஆண்டு கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டார்.

இந்த நடைபயணத்தின்போது 2022-ம் ஆண்டு டிசம்பர் 9-ந்தேதி நிருபர்களை சந்தித்த ராகுல் காந்தி, எல்லையில் 2,000 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துவிட்டது, அருணாச்சல பிரதேச எல்லைக்குள் ஊடுருவி சீனா தாக்குதல் நடத்துகிறது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் பலியாகி விட்டனர் என்பது உள்ளிட்ட கருத்துகளை தெரிவித்து இருந்தார்.

அதோடு ராகுல்காந்தி தனது சமூக வலைதள பக்கங்களிலும் இந்திய எல்லையில் சுமார் 2 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பகுதியை சீனா ஆக்கிரமித்துக் கொண்டது என்ற கருத்தை வெளியிட்டார். இது அரசியல் ரீதியாக மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

ராகுல்காந்தியின் இந்த குற்றச்சாட்டுகளை இந்திய ராணுவம் உடனடியாக மறுத்தது. என்றாலும் ராகுல்காந்தி தொடர்ந்து அந்த குற்றச்சாட்டுகளை கூறி வந்தார்.

இதை எதிர்த்து உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள எம்.பி.-எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு கோர்ட்டில் ராகுல் காந்திக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. எல்லை சாலைகள் அமைப்பின் முன்னாள் இயக்குனர் சங்கர் ஸ்ரீவத்சவா இந்த வழக்கை தொடர்ந்து இருந்தார். அதில், “ராகுல் காந்தியின் விமர்சனம் இந்திய ராணுவத்தை இழிவுபடுத்துவதாக உள்ளது” என்று சுட்டிக்காட்டி இருந்தார். இதை எதிர்த்து அலகாபாத் ஐகோர்ட்டில் ராகுல் மனு செய்தார். ஆனால் அவர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் ராகுல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் திபன்கர் தத்தா, அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: இந்திய ராணுவத்தை ஒருவர் அவதூறாக பேசுவதை எப்படி நியாயப்படுத்த முடியும். அதுவும் அரசியலில் மிகப்பெரிய பொறுப்பான எதிர்க்கட்சி தலைவராக இருக்கிற ஒருவர் இந்திய எல்லை ஆக்கிரமிப்பு குறித்து பொதுப்படையான கருத்துக்களை வெளியில் தெரிவிக்கக் கூடாது.

இந்திய எல்லையில் 2000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை சீனா ஆக்கிரமிப்பு செய்து இருப்பதாக ராகுல் காந்தி சமூக வலைதளத்தில் தகவல் வெளியிட்டுள்ளார். சீனா அப்படி ஆக்கிரமித்து இருக்கிறது என்பது ராகுல் காந்திக்கு எப்படி தெரியும். எந்த தகவலின் அடிப்படையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஒரு உண்மையான இந்தியன் எல்லை விவகாரம் பற்றி இவ்வாறு ராணுவத்தை அவதூறு ஏற்படுத்தும் வகையில் தகவல்களை வெளியிட மாட்டார். அதுவும் எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர் இப்படி பேசவேக் கூடாது.

எதிர்க்கட்சி தலைவர் சமூக வலைதளத்தில் மட்டும்தான் இப்படி கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். தனது கருத்தை ஏன் அவர் பாராளுமன்றத்தில் தெரிவிக்கவில்லை. இதுபற்றி அவர் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்ப வேண்டியது தானே? பேச்சு சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக ஆதாரம் இல்லாமல் எதையும் பேசக் கூடாது. இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள்.

மேலும் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தனர். அதோடு எதிர்மனுதாரர்கள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.

You Might Also Like

திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடரும்… செல்வப்பெருந்தகை அறிவிப்பு

அதிமுக விருப்ப மனு வாங்க குவிந்த தொண்டர்கள்: திணறியது தலைமை அலுவலகம்

தமிழக பாஜக தேர்தல்பொறுப்பாளராக பியூஷ்கோயல் நியமனம்

அமைச்சர் நேரு மீது வழக்குப்பதிவு செய்யணும்… அதிமுக எம்.பி., கோரிக்கை

கேரளா உள்ளாட்சி தேர்தலில் தோல்வியடைந்த முக்கிய புள்ளி

TAGGED:armyCondemnationevidenceJudgesRahul Gandhireal Indianஆதாரம்உண்மையான இந்தியன்கண்டனம்நீதிபதிகள்ராகுல்காந்திராணுவம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
தமிழகம்

வரும் 19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு?

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?