புதுடில்லி: மாட்டுத் தோலை பயன்படுத்தி அதிக லாபம் ஈட்டுங்கள் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தியுள்ளார். யாருக்கு தெரியுங்களா?
மாட்டு சாணத்தை மட்டுமில்லாமல், மாடுகளின் தோல் மற்றும் எலும்புகளை பதப்படுத்தி பயன்படுத்துவதை அதிகரிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தியுள்ளார்.
இவற்றை வணிகர்களுக்கு விற்பதற்கு பதிலாக, கூட்டுறவு சங்கங்கள் மூலம் பதப்படுத்தி, காலணி தயாரிக்கும் நிறுவனங்களுக்கு நேரடியாக விற்றால், அதன் மூலம் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும் எனவும் அவர் யோசனை கூறியுள்ளார்.