இரண்டு படங்களின் கதை விவாதத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
சென்னை : ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ‘லால் சலாம்’ படத்துக்குப் பிறகு, இந்தியில் ஒரு படம் இயக்குவதாக இருந்தார். ஆனால், எதிர்பாராத சில காரணங்களால், அப்படம் தள்ளிப்போகவே, தற்போது தமிழ் மற்றும் இந்தியில், ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்க தயாராகிவிட்டார். இரண்டுக்கும் ஒரே கதைதான் என்றாலும் வெவ்வேறு ஹீரோ மற்றும் ஹீரோயினாம். இதற்காக, தீவிரமான கதை விவாதத்தில் இருக்கிறாராம் ஐஸ்வர்யா.