ஒற்றை என்ஜினான நாங்கள் சிறப்பாக செயல்படுகிறோம்
ராஜஸ்தான்: இரட்டை என்ஜினில் ஒன்று எப்போதுமே பழுதாகியுள்ளது. ஒற்றை என்ஜினான நாங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம் என ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் பா.ஜனதாவை கிண்டல் செய்துள்ளார்.
மாநிலத்திலும், மத்தியிலும் பா.ஜனதா அரசு இருந்தால்தான் மக்களுக்கு திட்டங்கள் சரியான வகையில் சென்றடையும். இதனால் மாநிலத்திலும் மக்கள் பா.ஜனதாவை தேர்ந்தெடுக்க வேண்டும். அப்படி ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் ‘இரட்டை எஞ்ஜின்’ அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என பா.ஜனதா தலைவர்கள் பேசி வருவதற்குதான் இப்படி கிண்டல் செய்துள்ளார்.