தமிழகத்தில் தனித்து போட்டியிடுகிறது பகுஜன் சமாஜ் கட்சி
உத்தரபிரதேசம்: தனித்து போட்டி… உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. முதற்கட்டமாக, 25 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அக்கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், நாம் தமிழர் கட்சியின் சீமான் வெறுப்பு அரசியல் செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.