சென்னை உயர் நீதிமன்றத்திற்கு நாளை முதல் விடுமுறை
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மே 1ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயர் நீதிமன்ற பதிவாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘விடுமுறை கால அவசர வழக்குகளை வாரந்தோறும் திங்கள், செவ்வாய் கிழமைகளில் தாக்கல் செய்யலாம்’ எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், அவசர கால வழக்குகளை விசாரிக்கும் உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளின் பெயர் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.