எலுமிச்சை பழம் விலை பல மடங்கு உயர்வு
தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதிகளில் அதிகமாக எலுமிச்சை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தற்போது கோடை வெயிலின் தாக்கத்தால் எலுமிச்சை பழத்தை பொதுமக்கள் அதிகளவு வாங்குகின்றனர். மேலும் அண்டை மாநிலமான கேரளாவிற்கு எலுமிச்சை பழங்கள் ஏற்றுமதி செய்து வருவதால் முதல் ரகம் எலுமிச்சை பழம் கிலோ ரூ.200க்கும், இரண்டாம் ரகம் கிலோ ரூ.150க்கும் விற்பனை செய்யப்படுகிறது.