தெரு நாய்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பு: நாய்கள் கடித்து 12 பேர் காயம்
விருதுநகர்: விருதுநகர், அருப்புக்கோட்டையில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று புளியம்பட்டி பகுதியில் வெறி பிடித்த தெரு நாய்கள் கடித்து அதே பகுதியைச் சேர்ந்த முதியவர் ஆனந்த் உள்ளிட்ட 12 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தெருநாய்களை கட்டுப்படுத்த நகராட்சிக்கு கோரிக்கையும் விடுத்துள்ளனர்.