இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானபோது என்ன செய்தீர்கள்
கோவை: வாக்குப் பதிவில் நிறைய பேருக்கு வாக்கு இல்லை என புகார் எழுந்தது. இதையடுத்து கோவையில் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்கக்கோரி, சுதந்திர கண்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து, “ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியானபோது என்ன செய்தீர்கள்?” என்று சரமாரி கேள்வி எழுப்பியது.