பள்ளி தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியாகும் என கல்வித்துறை உறுதி
சென்னை: தமிழ்நாட்டில், 12 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி மே 6 மற்றும் மே 10ம் தேதிகளில் வெளியாகும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில், மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்.19ம் தேதி நடைபெற்றது. அதன் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியாக உள்ளது. இதனால் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என தகவல் பரவியது. இதையடுத்து, பள்ளிக் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.