தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: தீவிர பிரச்சாரம்… மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு முதல் கட்டமாக தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. இதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி இன்று அவர் வடசென்னை, திருவள்ளூர் தொகுதிகளில் போட்டியிடும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மாதவரம் அருகே பிரச்சாரம் மேற்கொண்டார்.