ஆந்திர – தமிழக மீனவர்கள் மத்தியில் மோதல்… பரபரப்பு
இசக்கப்பள்ளி: ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே கடலூரை மீனவர்களின் படகில் சிக்கி ஆந்திர மீனவர்களின் வலை அறுந்ததாகக் கூறப்படும் நிலையில், நடுக்கடலில் இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு உருவானது. வலை அறுந்ததை அடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் மோதலாக மாறிய நிலையில், தமிழக மீனவர்கள் தாக்கியதில் ஆந்திர மீனவர் ஒருவருக்குக் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.