கோயில் திருவிழாவில் மக்களுக்குள் மோதல்… பரபரப்பு
சேலம்: சேலம் அருகே வேம்படிதாளம் கிராமத்தில் ஸ்ரீசக்தி மாரியம்மன், காளியம்மன் கோவிலில் பங்குனி மாதத் திருவிழாவை ஒட்டி, வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, வேம்படிதாளம் ஊராட்சி மக்களுக்கும் ஆனைகுட்டப்பட்டி ஊராட்சி மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், ஐந்து பேர் படுகாயமடைந்த நிலையில் சேலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.