முருகனுக்கு இலங்கை துணை தூதரகம் பாஸ்போர்ட் வழங்கல்
சென்னை: மத்திய அரசு அனுமதித்தவுடன் அனுப்பப்படுவார்கள்… முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய மூவருக்கும் இலங்கை துணை தூதரகம் பாஸ்போர்ட் வழங்கியுள்ளது. ஒரு வாரத்தில் மத்திய அரசு அனுமதி அளித்தவுடன் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை பதிவு செய்த நீதிபதிகள், அடையாள அட்டை தேவையில்லை எனக்கூறி மனுவை முடித்து வைத்தனர்.