காங்கிரஸ் எம்பி ராகுலுக்கு அறிவுரை வழங்கிய தேர்தல் ஆணையம்
புதுடில்லி: கடந்தாண்டு நவம்பரில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய காங்கிரஸ் எம்.பி., ராகுல், பிரதமர் மோடி உட்பட பா.ஜ., தலைவர்களை ‘பிக்பாக்கெட்’ என விமர்சித்திருந்தார். இதை எதிர்த்து டிசம்பரில் ராகுலுக்கு எதிராக டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உயர்நீதிமன்றம், ராகுல் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் அறிவுறுத்தியது. இதையடுத்து பொது இடங்களில் பேசும்போது அநாகரிகமான சொற்களை பயன்படுத்த கூடாது. அதிக கவனத்துடன் பேச வேண்டும் என ராகுலுக்கு தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது.