பிரதமர் மோடியை சந்திக்கும் ஈபிஎஸ்., ஓ.பி.எஸ்.!!!
சென்னை: சென்னை வரும் பிரதமர் மோடியை, ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் சந்திக்கின்றனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இருவரும் கட்சி விஷயங்கள் பற்றி பேசுவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் சென்னை விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்க செல்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்ற பின், முதல் முறையாக மோடியை சந்திக்கிறார் ஈபிஎஸ் என்பதும் குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோடியை வரவேற்கும் நிகழ்வில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸும் பங்கேற்பார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.