புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாமாம்: விரைவில் அமலுக்கு வருது
பதுடில்லி: புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் முறையை 9 -12ம் வகுப்பு மாணவர்களிடையே செயல்படுத்த சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடைமுறை ஒரு மாணவரின் நினைவாற்றலை மதிப்பிடாமல், பாடத்தின் மீதான அவரின் புரிதல் திறனுக்கு முக்கியத்துவம் அளிப்பதாக கூறப்படுகிறது. இந்தாண்டு நவம்பர் தொடக்கத்தில் இத்திட்டம் சோதனை முறையில் நடைமுறைப்படுத்தபட உள்ளதாக கூறப்படுகிறது.