முன்னாள் முதல்வரின் மகள் கவிதா அமலாக்கத்துறையால் கைது
தெலுங்கானா: கைது செய்யப்பட்டார்… டெல்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா, எம்பி சஞ்சய் சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டநிலையில், இந்த மோசடியில் கவிதாவுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.