வேற்றுமையில் ஒற்றுமை கொண்டது இந்தியா: ஜனாதிபதி பெருமிதம்
புதுடில்லி: இந்தியாவில் பல கலாசாரங்கள் மற்றும் பல மதங்கள் இருந்தாலும் வேற்றுமையில் ஒற்றுமை கொண்டது என ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியுள்ளார்.
டில்லியில் ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரவபதி முர்முவை, முஸ்லீம் உலக லீக்கின் பொதுச் செயலாளர் அப்துல்கரீம் சந்தித்தார். இந்த சந்திப்பு பின், ஜனாதிபதி திரவுபதி முர்மு மேற்கண்டவாறு தெரிவித்தார்.