மூணாறில் 2 மாடிக்கு மேல் கட்டிடங்களை கட்ட இடைக்காலத் தடை
மூணாறு: மூணாறில் 2 மாடிக்கு மேல் கட்டிடங்களை கட்ட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிடப்பட்டது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திலுள்ள மூணாறு சர்வதேச சுற்றுலாத்தலமாகும். இயற்கை எழில் சூழ்ந்த இந்தப் பகுதியில் சமீபகாலமாக பல அடுக்கு மாடி கட்டிடங்கள் கட்டப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக இயற்கை ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதற்காக ஒரு சிறப்பு அமர்வை நியமித்து உத்தரவிட்டார். இந்த சிறப்பு அமர்வு மூணாறு தொடர்பான வழக்குகளை நேற்று விசாரித்தது. அப்போது மூணாறில் 2 மாடிக்கு மேல் கட்டிடங்களை கட்ட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிடப்பட்டது.