ஜெ., பரிசு பொருட்கள், உடமைகளை ஏலம் விட அரசு வக்கீல் நியமனம்
கர்நாடகா: சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பரிசு பொருட்கள், உடமைகள் ஆகியவற்றை ஏலத்திற்கு விட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அரசு தரப்பு வழக்கறிஞராக கிரண் எஸ். ஜவாலி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், பறிமுதல் செய்யப்பட்டு பல ஆண்டுகளாக கருவூலத்தில் உள்ள பல கோடி மதிப்புடைய தங்க, வைர நகைகள், பரிசுப் பொருட்களை ஏலம் விட வேண்டும் என வழக்கில் தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.