அவதூறு வழக்கில் ராகுல், முதல்வர் சித்தராமையாவுக்கு சம்மன்
பெங்களூரு: அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகியோருக்கு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
அரசு ஒப்பந்தங்களில் பாஜ அரசாங்கம் 40 சதவீத ஊழலில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தது.தொடர்பான அவதூறு வழக்கு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி ஜூலை 27ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.