20 ஆண்டுகளில் 57 கோடி யானை எடை கொண்ட பனிப்பாறைகளை இழந்த இமயமலை
புதுடில்லி: இமயமலை கடந்த 20 ஆண்டுகளில் 57 கோடி யானைகளுக்குச் சமமான எடை கொண்ட பனிப்பாறைகளை இழந்துள்ளது என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்திடி உள்ளது. புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக இமயமலையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில், பெரும் பனி இழப்பு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.