அந்த பேச்சுக்கே இடமில்லை… மத்திய அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்
புதுடில்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறும் பேச்சுக்கே இடமில்லை என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஒன்றிய அரசு அமல்படுத்தி உள்ள நிலையில், அசாம் உள்ளிட்ட நாட்டின் பிறமாநிலங்களில் போராட்டம் வலுத்து வருகிறது. இது குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறும் பேச்சுக்கே இடமில்லை. சிஏஏ சட்டம் தொடர்பாக ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம்.