மக்களை திசை திருப்பும் வகையில் பேசும் உதயநிதி… ஜெயக்குமார் குற்றச்சாட்டு
சென்னை: முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு… மக்களுக்கு செய்த நல்லவற்றை பற்றி கூறி வாக்கு சேகரிக்காமல், மக்களை திசை திருப்பும் வகையில் அமைச்சர் உதயநிதி பரப்புரை செய்வதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை இராயபுரம் பகுதியில் தேர்தல் பணிமனை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், தமிழகம் முழுவதும் தி.மு.க.விற்கு எதிர்ப்பு அலை உள்ளதாக தெரிவித்தார்.