தடையின்றி ஆயுத உதவி வழங்கப்பட்டால் மட்டுமே போரிட முடியும்
உக்ரைன்: உக்ரைன் அமைச்சர் தகவல்… தேவைப்படும் நேரத்தில் தடையில்லாமல் ஆயுத உதவி வழங்கப்பட்டால் மட்டுமே நாட்டுக்குள் முன்னேறி வரும் ரஷ்யப் படைகளை எதிர்த்துப் போரிட முடியும் என உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்தார். லிதுவேனியாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது அவ்வப்போது வழங்கப்படும் சிறு சிறு உதவிகளால் எந்தப் பலனும் கிடைக்காது என்று தெரிவித்தார்.