பிரச்சினையாக சித்தரிக்காதீர்கள்… மத்திய அரசுக்கு எச்சரிக்கை
புதுடில்லி: விவசாயிகள் போராட்டத்தை ஒரு பிரச்சனையாக மத்திய அரசு சித்தரித்தால் ஓயப்போவதில்லை என பாரத் கிசான் யூனியன் (பிகேயு) தலைவர் ராகேஷ் திகாயத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பல்வேறு பிரச்னைகளால் பல்வேறு விவசாயிகள் சங்கங்கள் தங்களின் வழிகளில் போராடுகின்றன. விவசாயிகள் மேற்கொண்டுள்ள ‘டெல்லி சலோ’வை ஒரு பிரச்சனையாக சித்தரிக்கக் கூடாது. நாங்கள் விவசாயிகளிடமிருந்து வெகு தொலைவில் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.