சென்னை : சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பஹல்காம் தாக்குதலை அடுத்து, எல்லையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. மாநில அரசுகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில், சென்னையில் ஓட்டல்கள், ரயில் நிலையங்கள், மெட்ரோ, பேருந்து நிலையங்கள், விமான நிலையங்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு பணிகளைப் பலப்படுத்த உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இதனால் போலீஸார் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்தி கண்காணித்து வருகின்றனர். பொதுமக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களிலும் போலீசார் ரகசிய கண்காணிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். மத்திய அரசு வாயிலாக உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.