சென்னை: மாணவர்கள் இலவச லேப்டாப் விண்ணப்பிக்க லிங்கை க்ளிக் செய்ய வேண்டாம் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏன் தெரியுங்களா?
கல்லூரி மாணவர்கள் 20 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை இரண்டு கட்டங்களாக தமிழ்நாடு அரசு செயல்படுத்துகிறது. இதன் முதல் கட்டம், கடந்த 5ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையகத்தில் நடந்தது.
இந்த லேப்டாப்பில், அமெரிக்காவின் Perplexity AI நிறுவனத்தோடு எல்காட் நிறுவனம் ஒரு சிறப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. அதன்படி 6 மாத காலத்திற்கு Perplexity Pro AI வசதி கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “மனித இனம் நெருப்பையும், சக்கரத்தையும் கண்டுபிடித்த காலத்தில் அத்தோடு போதும் என நிறுத்தியிருந்தால், இன்று விண்வெளியில் ஆராய்ச்சி சாதனைகளை படைக்க முடியுமா? மனிதர்களுக்கு காலம் கொடுத்திருக்கும் இரண்டாவது நெருப்புதான் ஏ.ஐ. (செயற்கை நுண்ணறிவு). அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளத்தான் இன்று உங்களிடம் லேப்டாப் கொடுத்திருக்கிறோம்” என பேசினார்.
தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பாகம், இலவச மடிக்கணினி திட்டத்திற்கு எந்த ஆன்லைன் விண்ணப்ப முறையும் இல்லை என்று கூறியுள்ளது. அரசு எந்த இணையதளம் அல்லது டிஜிட்டல் போர்ட்டலில் விண்ணப்பிக்கச் சொல்லவில்லை. அத்தகைய லிங்குகள் போலியானவை என எச்சரித்துள்ளது.