சென்னை: பெரிய நெல்லிக்காய் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்று பெரும்பாலோனோர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், உண்மை என்ன தெரியுமா?
பெரிய நெல்லிக்காய் பெருமளவு வைட்டமின் `சி’ நிறைந்தது என்பது நமக்கெல்லாம் தெரியும் என்றாலும், கொரோனா காலகட்டத்தில்தான் பெரிய நெல்லிக்காயின் மகத்துவமும், அது தருகிற நோய் எதிர்ப்பு சக்தியும் பரவலாகத் தெரிய ஆரம்பித்தது.
தேவையான பொருட்கள் :
நெல்லிக்காய்- 250 கிராம்
நாட்டுசர்க்கரை- 100 கிராம்
தேன்- 50 கிராம்
பூசணி விதை- ஒரு ஸ்பூன்
வெள்ளரி விதை- – ஒரு ஸ்பூன்
செய்முறை: நெல்லிக்காய்களை நன்றாக சுத்தமாக கழுவி அதன்பிறகு அதனை துருவிக்கொள்ள வேண்டும். துருவிய நெல்லிக்காய்களை ஒரு பாத்திரத்தில் போட்டு குக்கரில் தண்ணீர் ஊற்றி அந்த பாத்திரத்தை அதனுள் வைத்து ஆவியில் வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து வெல்லத்தை போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரையும் வரை வைத்திருந்து வடிகட்டிக்கொள்ள வேண்டும். அதன்பிறகு மீண்டும் ஒரு அடிகனமான வாணலியை வைத்து அதில் வேகவைத்த நெல்லிக்காய் மற்றும் வெல்லத்தை போட்டு மிதமான தீயில் வைத்து கிளற வேண்டும்.
நெல்லிக்காயில் உள்ள தண்ணீர் வற்றும் அளவுக்கு கிளரிக்கொண்டே இருக்க வேண்டும். நன்றாக வதங்கி வந்ததும் அதில் தேனை ஊற்றி நன்றாக கிளரி சுருள வதங்கி வந்ததும் இறக்கும் போது பூசணி விதை மற்றும் வெள்ளரி விதை சேர்த்து கிளரி இறக்க வேண்டும். இது சூடு ஆறியதும் ஒரு கண்ணாடி ஜாரில் போட்டு வைத்துக்கொள்ளலாம். எத்தனை மாதங்கள் ஆனாலும் கெட்டுப்போகாமல் இருக்கும்.
நெல்லிக்காய் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும். உடம்பில் இருக்கிற ரணங்களை சீக்கிரமாக ஆற்றும். வயிற்றுப் புண்களைக் குணமாக்கும். இதயத்துக்கும் நல்லது. நோய்த்தொற்றுகள் வராமல் காக்கும். நம் உடம்பில் வளர்சிதை மாற்றம் நிகழும்போது ஒவ்வொரு செல்லில் இருந்தும் கழிவுகள் வெளியேறும்.
இந்தக் கழிவுகள் வெளியேறவில்லை என்றால், உடலில் வீக்கம் ஏற்படுவதில் ஆரம்பித்து புற்றுநோய் வரை வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. பெரிய நெல்லிக்காயில் உள்ள பாலிபினால், டேனின், ஃப்ளேவினாய்ட்ஸ் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியைத் தந்து மேலே சொன்ன பிரச்சினைகள் வராமல் தடுப்பதற்கு பயன்படுகிறது.