சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடைச் சட்ட வழக்கின் விசாரணையை முடிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் நான்கு மாதங்கள் அவகாசம் அளித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடை சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஜாமீன் வழங்க மறுத்து, வழக்கை 3 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவிட்டது.
முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இன்னும் தொடங்காத நிலையில், விசாரணையை முடிக்க மேலும் 4 மாதங்கள் அவகாசம் அளிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றப் பதிவாளருக்கு முதன்மை அமர்வு நீதிமன்றம் கடிதம் அனுப்பியுள்ளது.
அந்த கடிதத்தின் அடிப்படையில் இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வக்கீல் கூறியதாவது:-
விசாரணை நீதிமன்றத்துக்கு கால அவகாசம் நிர்ணயம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்ட மறுநாளே, விசாரணை நீதிமன்றங்களுக்கு கால அவகாசம் விதிக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மதித்து, மனு மீது மேலும் மனுக்கள் தாக்கல் செய்யாமல் விசாரணையை முடிக்க ஒத்துழைக்க வேண்டும் என்று நீதிபதி குறிப்பிட்டார். உச்ச நீதிமன்ற உத்தரவை சாதகமாக காட்டக்கூடாது.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி நான்கு மாதங்கள் அவகாசம் கோரியுள்ளார். அதற்குள் வழக்கை முடித்து வைக்கும் திறமை அவருக்கு உள்ளது.
எனவே 4 மாத கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதற்குள் வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.