கடலூர்: தமிழக ஆளுநர் ஆர்/என். ரவி சிதம்பரத்தில் நடைபெற்ற சுவாமி சகஜானந்தா பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதற்காக இன்று காலை சிதம்பரம் வந்தார். இந்நிலையில் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரம் மேலவீதியில் உள்ள அண்ணா சிலை அருகே இந்திய கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சிதம்பரம் நகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் மாதவன், மாநிலக்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, மாநிலக்குழு முன்னாள் உறுப்பினர் மூசா, தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் குமரன், காங்கிரஸ் நகர தலைவர் மகின், மாநில நிர்வாகி ஜெமினி ராதா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணை செயலாளர் சேகர் உட்பட 100-க்கும் மேற்பட்டோர், மாவட்ட இதில், செயலாளர் தமீமுன் அன்சாரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டத் தலைவர் தமிழ் ஒளி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில், சுவாமி சகஜானந்தாவின் கொள்கைகளை திருட முயற்சிக்கும் ஆர்.எஸ்.எஸ்.க்கு தமிழக கவர்னர் ஆதரவு அளிப்பதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. கருப்புக்கொடி போராட்டத்தில் கலந்து கொண்ட 100-க்கும் மேற்பட்டோரை சிதம்பரம் டிஎஸ்பி லாமேக் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.