நாமக்கல்: மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் முருகன் நேற்று நாமக்கல் வந்தார். பின்னர் நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார். இதையடுத்து நாமக்கல்-மோகனூர் சாலையில் உள்ள இலவச நீட் தேர்வு பயிற்சி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது, அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:-

தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவாக உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் இந்த கூட்டணி மகத்தான வெற்றி பெற்று ஆட்சிக்கு வரும். மத்திய அரசுடன் தமிழக அரசு தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. இதனால் தமிழகத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசுடன் இணக்கமாக உள்ள மத்திய பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன. தமிழகத்தில் நீட் தேர்வு குறித்து மாணவர்களுக்கு தவறான தகவல் பரப்பப்படுகிறது. நீட் தேர்வை தமிழக மாணவர்கள் நல்ல முறையில் எதிர்கொள்கின்றனர் என்றார்.