பேராவூரணி : பேராவூரணி அருகே பொன்னாங்கண்ணி பகுதியில் தெரு நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே பொன்னாங்கண்ணி பகுதியில் நாய்கள் தொல்லை அதிக அளவில் உள்ளது. இதனால், அந்த பகுதி மக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர்.
இரு சக்கர வாகனத்தில் செல்வோரை விரட்டி,விரட்டி நாய்கள் கடிக்கின்றன. மேலும், பள்ளிக்குச் செல்லும் மாணவ-மாணவிகள், குழந்தைகள் முதியவர்களை விரட்டிச்சென்று கடித்து விடுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளுக்கு நாள் நாய்களின் தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் தெருக்களில் நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர்.