தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு நடுவூர் கால்நடை ஆராய்ச்சி பண்ணைக்கு சொந்தமான நிலங்களை சிப்காட அமைப்பதற்கு கைப்பற்றுவதை கைவிட வேண்டும் என வலியுறுத்தி பி.ஆர்.பாண்டின் தலைமையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் நடுவூர் கிராமத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை கல்லூரி மற்றும் கால்நடை ஆராய்ச்சி பண்ணை செயல்பட்டு வருகிறது
இங்கு சுமார் 500 க்கும் மேற்பட்ட நாட்டு இன வகை கால்நடைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நடுவூர் கால்நடை பண்னைக்கு சொந்தமான 500 ஏக்கர் ஆராய்ச்சி நிலங்களை சிப்காட் அமைப்பதற்கு கையகப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி பி.ஆர்.பாண்டியன் தலைமையில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜத்தை சந்தித்து மனு அளித்தனர்.