விழுப்புரம்: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயான கொள்கை விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, நேர்த்திக்கடன் செலுத்தி, அம்மனை வழிபட்டனர். மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் மாசி தேர் திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இரண்டாம் நாளான நேற்று, மயான வைபவம் நடந்தது. இதை முன்னிட்டு நேற்று அதிகாலை 5 மணிக்கு அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவசம் அலங்காரம் செய்யப்பட்டது.
காலை 10.30 மணிக்கு விஸ்வரூப காளி வடிவில் அம்மன் வடக்கு வாசல் வழியாக சிம்ம ரதத்தில் ஊர்வலமாக மயானத்தை நோக்கி வந்தார். வழிநெடுகிலும் திரண்டிருந்த பக்தர்கள் நாணயங்கள், பழங்கள், தானியங்கள், பலியிடு சேவல் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். காலை 11 மணிக்கு மயானத்தில் அம்மன் காட்சியளித்த அங்காளம்மன் பிரம்ம கபாலத்தை உடமையாக்கும் நிகழ்ச்சியும், பக்தர்கள் காணிக்கையாக சேகரித்து வைத்திருந்த உணவுப் பொருட்களையும் பூசாரிகள் சூறையாடினர்.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் மதியழகன் மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர். 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மயான கொள்ளை நிகழ்ச்சிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மேல்மலையனூருக்கு பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.