May 17, 2024

இலங்கையில் பொதுப்போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக 75 பஸ்களை இந்தியா வழங்கி உதவி

கொழும்பு,

இலங்கையில் பொது போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக இந்தியா 75 பேருந்துகளை நன்கொடையாக வழங்கியுள்ளது. அண்டை நாடான இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியா கடந்த ஆண்டு சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ.32 ஆயிரத்து 800 கோடி) வாழ்வாதார நிதியாக அந்நாட்டுக்கு வழங்கியது. கடந்த ஜனவரி மாதம் இந்தியா இலங்கைக்கு 900 மில்லியன் டாலர் (சுமார் ரூ.7,380 கோடி) கடனாக அறிவித்தது.

பின்னர் எரிபொருள் வாங்க 500 மில்லியன் டாலர் (சுமார் ரூ. 4,100 கோடி) நிதி உதவி அறிவித்தது. இந்தக் கடன் பின்னர் 700 மில்லியன் டாலராக (சுமார் ரூ.5,740 கோடி) உயர்த்தப்பட்டது. இதன்மூலம் முதலில் அண்டை நாடு என்ற பெயரில் இந்தியா இலங்கைக்கு தாராளமாக உதவி செய்து வருகிறது. இந்நிலையில், அங்கு பொது போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த இந்தியா 75 பேருந்துகளை வழங்கியது. இதுகுறித்து இலங்கைக்கான இந்தியத் தூதுவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கையில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக இந்தியத் தூதுவர், போக்குவரத்துச் சபைக்கு 75 பேருந்துகளை வழங்கினார். மேலும், இலங்கை காவல்துறைக்கு இந்தியா கடனாக 125 சொகுசு வாகனங்களை வழங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!