இலங்கைக்கு எதிரான கடைசி டி20 போட்டி… டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு
ராஜ்கோட்,
இந்தியா வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. மும்பையில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 2 ரன் வித்தியாசத்திலும், புனேவில் நடந்த இரண்டாவது போட்டியில் இலங்கை 16 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது.
இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதும் தொடரை யார் வெல்வது என்பதை தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கு டாஸ் போடப்பட்டது. இந்தியா டாஸ் வென்று பேட்டிங் செய்ய அறிவித்தது.