சீனப்பயணிகள் மீதான பிற நாடுகளின் கட்டுப்பாடுகள் பற்றி உலக சுகாதார நிறுவனம் கருத்து
ஜெனிவா,
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, சீனாவிலிருந்து முழுமையான தரவுகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை, அங்கு தொற்று பரவல் கணிசமாக அதிகரித்துள்ளது. சீனாவின் ஜெனிவாவில், மரபணு மாற்றமடைந்த ஒமிக்ரான் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தொற்றுநோயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ள பல நாடுகளுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நோய்த்தொற்று தங்கள் நாட்டில் மீண்டும் தலைதூக்காமல் இருக்க மற்ற நாடுகள் முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இதன் மூலம், இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை சான்றிதழை கட்டாயமாக்கியுள்ளன. இதை உலக சுகாதார அமைப்பு நியாயப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், ஜெனிவாவில் நேற்று காணொலி மூலம் அளித்த பேட்டியில், ” சீனாவில் தொற்று பரவல் மிகவும் அதிகரித்துள்ளது அங்கிருந்து முழுமையான தரவுகள் இல்லை. இந்த நிலையில் சில நாடுகள் தங்கள் குடிமக்களைப் பாதுகாக்கும் என்று நம்பி எடுக்கிற நடவடிக்கைகள் சரியானவை, புரிந்துகொள்ளத்தக்கவை” என தெரிவித்தார்.