May 27, 2024

பிளஸ் 2 தேர்வில் மாணவர்களுக்கு உதவி: 5 கல்வித்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட்!

பிளஸ் டூ தேர்வு எழுத மாணவர்களுக்கு உதவியதாக 5 கல்வி அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிளஸ் டூ தேர்வுகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில், இந்தத் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதைப் பார்க்கிறோம்.

அந்த வகையில் நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் உள்ள சாம்ராஜ் அரசு உதவி பெறும் பள்ளியில் கடந்த 27ம் தேதி நடந்த கணித தேர்வில் மாணவர்கள் விடை எழுத உதவியதாக கல்வித்துறை அதிகாரிகள் 5 பேர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக வந்த புகாரின் பேரில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையின் ஒரு பகுதியாக சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், ஐந்து மாணவர்களுக்கு பதில் எழுத கல்வித்துறை அதிகாரிகள் உதவி செய்தது உறுதியானது. இதையடுத்து 5 கல்வித்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!