2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்: அண்ணாமலை நம்பிக்கை
சென்னை: தமிழகத்தில் திமுகவுக்கு எதிராக உள்ள மக்களின் உணர்வை வரும் நாடாளுமன்ற தேர்தலில் எப்படி ஓட்டுகளாக மாற்றுவது என்பதுதான் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சவாலாக உள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்க வந்த அதிமுகவினர், குறிப்பாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்களுடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
அழைப்பின் பேரில், எடப்பாடி பழனிசாமி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள், பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் உட்பட நானும் கலந்து கொண்டு பேசினோம். குறிப்பாக, 2024-ல் நமது இலக்கு, திமுக ஆட்சி மீது மக்களுக்கு எவ்வளவு கோபம்? திமுக ஆட்சி எப்படி மக்களுக்கு எதிராக மாறியுள்ளது? அதை சமீபகாலமாக பார்த்து வருகிறோம்.
அதன் அடிப்படையில் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும். அதேபோல் புதுச்சேரியில் வெற்றி பெற்று 40க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற்று 400 எம்.பி.க்களுடன் இந்திய பிரதமர் மீண்டும் 3வது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும். இந்த யோசனையை நானும், அதிமுக பிரமுகர்களும் பாஜக தேசிய தலைவர்களிடம் முன்வைத்தோம். நிச்சயம் நடக்கும்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க எத்தனை இடங்களில் போட்டியிடும், எத்தனை கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் என்பதை முடிவு செய்ய இன்னும் காலமும் இடமும் உள்ளது. எனவே தொகுதி பங்கீடு பற்றியோ, யார் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது பற்றியோ இந்த நேரத்தில் பேச வேண்டியதில்லை. இம்முறை திமுகவுக்கு எதிராக இருக்கும் மக்களின் மனநிலையை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பக்கம் திருப்பி 39 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது எப்படி என்று பேசினோம்.
தமிழகத்தில் திமுகவுக்கு எதிராக இருக்கும் மக்களின் உணர்வை எப்படி நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகளாக மாற்றுவது என்பது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சவாலாக உள்ளது. ஊழலுக்கு எதிராக பாஜக தொடர்ந்து போராடும். பாஜக ஊழலுக்கு எதிரானது” என்று அண்ணாமலை கூறினார்.