கொரோனாவை விட 100 மடங்கு மோசமான பறவைக்காய்ச்சல் பரவும் அபாயம்
நியூயார்க்: கொரோனா நுண்ணுயிரியைக் காட்டிலும் 100 மடங்கு மிக மோசமான பறவைக் காய்ச்சல் பரவும் அபாயம் இருப்பதாகவும், அது பாதித்தால், பாதிக்கும் மேற்பட்டோர் பலியாகும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பறவைக் காய்ச்சல் வைரஸின் உருமாறிய எச்5என்1 படிமங்கள் சில இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து சுகாதார நிபுணர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன